ADVERTISEMENT
ADVERTISEMENT
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று (31/10/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,683 கனஅடியில் இருந்து 8,271 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.10 அடியாகவும், நீர் இருப்பு 64.97 டி.எம்.சியாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு வினாடிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதனிடையே, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 7,000 கனஅடியில் இருந்து 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ADVERTISEMENT
Show comments