கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கேஎஸ்ஆர் அணைகளில் இருந்து காவிரியில்நீர் திறக்கப்பட்டது. நேற்றுவரைமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கன அடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது மேட்டூருக்கு வரும் நீரின் அளவுவிநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

Advertisment

 coming Water level drops to Mettur Dam

மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழக எல்லையானபிலிகுண்டுலுவில்காவிரி நீர் வரத்து 40 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாயில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 107.75அடியாகவும், நீர் இருப்பு 70.25 டிஎம்சியாகவும் இருக்கிறது.