ADVERTISEMENT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது...

08:25 AM Sep 16, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று (16/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 8,622 கனஅடியில் இருந்து 12,894 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.78 அடியாகவும், நீர்இருப்பு 54.70 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

இதனிடையே, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து விநாடிக்கு 12,000 கனஅடியிலிருந்து 16,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT