ADVERTISEMENT

கஜா புயலில் பாதிக்கப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி!!

01:21 PM Nov 23, 2018 | kalaimohan

கடந்த 16 ந் தேதி அதிகாலை கஜாவின் ஆட்டம் கோரதாண்டவமாக மாறி பல உயிர்களை எடுத்துக்கொண்டு பலகோடி மரங்களையும் சாய்த்துவிட்டு சென்றது. இந்த கோரதாண்டவத்தால் மரங்களை இழந்த விவசாயிகள் ஒவ்வொருவராக அதிர்ச்சியில் விசம் குடித்து தற்கொலை செய்து கொள்கிற செய்திகள் பெரும் சோகத்தை ஏற்படுத்திருக்கும் நிலையில்.புயல் பாதிப்பு நடந்து பலநாட்கள் ஆகியும் கஜா புயலில் பாதிக்கப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை, சிவகொள்ளைக்காடு பகுதியில் நாடியம்மன்கோயில் பின்புறம் வசித்து வந்தவர் சங்கர். இவர் தனது அக்கா அனிதாவுடன் வீட்டில் நேற்று இரவு தூங்கியுள்ளார். அப்போது கஜாவின் தாக்கத்தில் ஏற்கனவே ஆடிப்போய் இருந்த வீட்டின் திண்ணையில் தூங்கிய சங்கரின் மேல் இன்று அதிகாலை வீசிய பலத்த காற்றுக்கு மேல்கூரை இடிந்து செங்கல் மேல் விழ தூங்கிய சங்கர் எழாமல் தூங்கிய நிலையிலேயே இறந்து கிடந்தார்.

கஜாவின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் அடுத்த காற்றும் உயிர்களை வாங்க துடிப்பது ஏனோ?

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT