ADVERTISEMENT
குடியரசு தின விழாவை முன்னிட்டு முப்படையினர் அணிவகுப்பு ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது.
ADVERTISEMENT
73வது குடியரசு தினவிழா வரும் 26ம் தேதி விமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சென்னை மெரினா - காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் தேசிய கொடியை ஏற்றவுள்ளார்.
இதையடுத்து முப்படை, மாநில காவல்துறை, கடலோர காவல்துறையின் அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஏற்கனவே கடந்த 20 மற்றும் 22ம் தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்ற நிலையில், இன்று முழு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முழு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
ADVERTISEMENT
Show comments