ADVERTISEMENT
திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றுவரும் சிறப்பு குறைதீர் முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. அதில் 40 ஆயிரம் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் விதமாக, வருகிற முப்பதாம் தேதி திருச்சிக்கு வருகைதரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், நேரடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
ADVERTISEMENT
எனவே வருகிற 30ஆம் தேதி நடைபெற உள்ள அரசு விழா, கேர் கல்லூரி வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டு மேடைகள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. விழா நிகழ்விடப் பணிகளை அமைச்சர் கே.என். நேரு இன்று (23.12.2021) நேரில் பார்வையிட்டு, அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு. சிவராசு இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Show comments