ADVERTISEMENT

பிரபல கூரியர் நிறுவனத்தில் ஐ.டி. ரெய்டு

12:43 PM Jan 04, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் உள்ள பிரபல தனியார் கூரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தனியார் கூரியர் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாகக் கூறப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட அந்நிறுவனம் இது போன்ற செயல்களில் நாங்கள் ஈடுபடுவதில்லை என்று அவர்களது இணையதளத்திலேயே தெரிவித்திருந்தது. இருப்பினும், இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தன.

அதே போன்று, தனியார் கூரியர் நிறுவனம் வாங்கும் பணத்திற்கும், கூரியர் செய்யும் பணத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவும், வரவு செலவு கணக்குகளில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது இந்தச் சோதனையானது நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் கிண்டி, ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சோதனை செய்யும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT