சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள தனியார் ஸ்டீல் கம்பெனிக்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை ஆயிரம் விளக்கு, எழும்பூர், மன்னடி தாம்பரம், குன்றத்தூர், வேப்பேரி, பூக்கடை, வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.