ADVERTISEMENT

         துப்பாக்கி சுடுதல் போட்டியில் சென்னை பள்ளி மாணவன் சாதனை..!

11:33 PM Jul 07, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பாண்டிச்சேரி அரசால் கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்டு வந்த இண்டர் ஸ்கூல் சாம்பியன் சிப், துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதினோரு கிளப்பை சேர்ந்த 230 பள்ளி மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இந்த போட்டியில் சென்னை பள்ளி மாணவன் ஸ்வன்சன் தங்கதுரை இரண்டு தங்கம் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ADVERTISEMENT


இது தொடர்பாக இவரின் பயிற்சியாளர் பரந்தாமன், " பொதுவாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். மேலும் ஆர்வம் இருந்தாலும் இப்போட்டியில் பயிற்ச்சி பெருவது கடினம் என்று நினைக்கிறார்கள். ஆனால் துப்பாக்கி சுடுதல் என்பது ஒரு போட்டி மட்டுமே. அதே போல் இதில் பயிற்சி பெறுவதும் எளிது. குறிப்பாக சொல்லப்போனால் ஸ்வன்சன் தங்கதுரை சமீபத்தில் தான் ஆர்வமுடன் பயிற்சி பொற்றாலும் அவரின் தனிப்பட்ட முயற்சியும், ஆர்வமும் தான் இரண்டு தங்கபதக்கமும் ஒரு வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார் என்பது பாராட்டக்குரியது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT