Skip to main content

புதுச்சேரி சுதந்திர தினவிழா -காரைக்காலில் கோலாகலமான கொண்டாட்டம்!

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

சுமார் அறுபது ஆண்டுகால நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 1ஆம் தேதியை புதுவை மாநில அரசு தங்களின் விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இன்று காரைக்காலிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது.

புதுச்சேரி சுதந்திர தினவிழாவிற்கு முன்பு, அதன் வரலாற்றை சற்று திரும்பி பார்போம்,

1673 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் முதன் முதலில் காலூன்றியதும், அதே ஆண்டில் தங்களின் வனிகத்தை துவங்கிய இடம் புதுச்சேரிதான். அதன் பிறகு 1721 ம் ஆண்டு மாஹியையும், ஏனாமையும், காரைக்காலையும் சந்திரனாகூரையும், அடுத்தடுத்து தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். 

இந்தியா முழுவதும் பல்வேறு கோணங்களில் விடுதலைப் போராட்டங்கள் எழுந்து கிளர்ச்சியை உண்டாக்கியதால் 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு மட்டும் சுதந்திரம் அளித்தனர். ஆனால் புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று புதுச்சேரியிலும் போராட்டம் வெடித்தது. அந்தபோராட்டத்தில் புதுச்சேரி பொதுமக்களும்,  இந்திய போராட்ட வீரர்களும் கலந்துகொண்டனர். அந்த போராட்டம் மிக தீவிரமானதால் அப்போதைய இந்திய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு பிரெஞ்சு அரசாங்கத்திடம் புதுச்சேரியின் விடுதலை பற்றியும், இங்கு நடக்கும் போராட்டங்கள் குறித்தும் எடுத்துக்கூறினார். பிரெஞ்சு அரசாங்கமோ,"புதுச்சேரி மக்கள் விருப்பப்பட்டால் நாங்கள் வெளியேறுகிறோம்" என தெரிவித்தது.

அதன்பிறகு புதுச்சேரி மக்களின் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு நெட்டப்பாக்கம் அருகில் உள்ள கீழூர் என்கிற கிராமத்தை வாக்கெடுப்புக்கான இடத்தையும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் புதுச்சேரியில் சட்ட மன்ற உறுப்பினர்களோ, அதன்கீழ் உள்ள நிர்வாகமோ இல்லாததால், நிர்வாக வசதிக்காக கொம்யூன்களாக பிரிக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரமே இருந்தன.

ஒவ்வொரு கொம்யூன்களிலும் மக்களின் பிரதிநிதிகளாக ஒரு மேயர் எனவும் அவர்களுக்கு கீழ் கவுன்சிலர்கள் என்றும் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்படியே 1954 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 18 ம் தேதி வாக்கெடுப்பு நடந்தது.

புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் சந்திரனாகூர் ஆகிய பகுதிகளிலிருந்து மக்கள் பிரதிநிதிகளான 178 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். அந்த வாக்குப்பதிவில் புதுச்சேரி பிரதிநிதிகள் இந்தியாவுடன் சேர ஆதரவாக 170 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் பதிவாகின. இந்த முடிவுகளுக்கு பிறகு நவம்பர் 1ஆம் தேதி பிரெஞ்சிந்திய பகுதிகள் அனைத்தும் இந்தியாவுடன் அதிகாரபூர்வமாக இனைக்கப்பட்டது. இதில் சந்திரநாகூர் கல்கத்தா அருகில் இருப்பதால் அங்குள்ள மக்கள் நிர்வாக வசதிக்காக இவ்வளவு தூரம் வந்து செல்ல முடியாது என தாங்களை மேற்கு வந்ததோடு இணைந்து கொள்வதாக தெரிவித்தனர். 

புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்து விட்டதால் இந்தியாவின் சுதந்திரதினமான ஆகஸ்ட் 15ம் தேதிக்கு மறுநாள் 16-ம் தேதியை புதுச்சேரியின் சுதந்திர தினமாக புதுச்சேரி அரசு கொண்டாடி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் பல அறுபது ஆண்டுகாலமாக போராட்டம் நடத்தினர், தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக," நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாட அறிவிக்க வேண்டும்,"என்று கோரிக்கை வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் பயனாக நவம்பர் 1-ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக அறிவித்து சுதந்திரத்தை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காரைக்கால் கடற்கரை சாலையில்  பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின விழா மிகவும் கோலாகலமாக துவங்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட புதுச்சேரியின் வேளாண்மைத் துறை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து சமாதானப் புறாக்களை பறக்கவிட்டார். தொடர்ந்து  விடுதலை நாள் பேருரையாற்றிய அமைச்சர் கமலக்கண்ணன், அரசின் திட்டங்கள் குறித்தும், நிர்வாகம் குறித்தும் சாதனைகள் குறித்தும் விரிவாக பேசினார். அதில் இனிவரும் காலங்களில் ஐ.ஏ.எஸ்; ஐ.பி.எஸ் அதிகாரிகளை உறுவாக்கும் பயிற்சி மையங்களை காரைக்காலில் துவங்கபடும் என அறிவித்தார்.


காரைக்கால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆடல்,பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு  அசத்தினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story

'கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் வேண்டும்' - எழும் கோரிக்கை

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Mani Mandapam for Kodikatha Kumaran - the demand that arises

கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் வேண்டும் என கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சமுதாய அமைப்பு அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் கிராமத்தில் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக குமரன் பிறந்தார். இவருடைய இயற்பெயர் குமாரசாமி.

தன் குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாகப் பள்ளிப் படிப்பை ஆரம்பப் பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். பின்னர் அவர் கைத்தறி நெசவு தொழிலை செய்து வந்தனர். 1923ல் ராமாயி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மாற்று தொழில் தேடி திருப்பூர் சென்று அங்கு இருக்கும் ஈஞ்சையூரில் ஒரு மில்லில் எடை போடும் வேலையில் சேர்ந்தார்.

திருப்பூரில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய சிப்பாய்களால் அடிபட்டு கையில் இந்திய தேசியக் கொடியுடன் மயங்கி விழுந்து இறந்ததால் இவருக்கு கொடி காத்த குமரன் என்ற பெயர் வந்தது. இவருக்கு சென்னிமலையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக  சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறது. இதுகுறித்து செங்குந்த மகாஜன சங்க தலைவர் நந்தகோபால் மற்றும் செயலாளர் ஆசை தம்பி ஆகியோர் கூறும்போது, "அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த கொடிகாத்த குமரனுக்கு மட்டும் அரங்கம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  தேச விடுதலைக்காகப் போராடிய கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் அவர் பிறந்த சென்னிமலையில் கட்ட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னிமலையில் விரைவில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.