ADVERTISEMENT

பொதுத்தேர்வு விடைத்தாள் மையத்தில் காவலர் தற்கொலை!

08:15 AM May 18, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரத்தில் பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (26) ஆயுதப்படை காவலர் கடந்த 6-ஆம் தேதி முதல் சிதம்பரம் தனியார் பள்ளியில் விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பணியிலிருந்த இவர், இன்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட காவலருக்கு ஜூன் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளியில் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT