பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் ஒன்றில் இருந்து தனது மகள் குடிக்க மாசா வாங்கி கொடுத்துள்ளார். அங்கேயே அதனை திறந்து அப்போதே குடிக்க தொடங்கியுள்ளார். உறவினர்களை பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு தனது மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்ட நேரத்தில் பரத்தின் மகள் வாந்தி எடுத்து மயங்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியான பரத் தனது மகளை உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் புட் பாய்சனாகியுள்ளது எனக்கூறியுள்ளனர். சந்தேகமடைந்த பரத் தான் வாங்கி கொடுத்த மாசாவை திறந்து பார்த்தபோது அதில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுப்பற்றி அந்த கடையில் சென்று விசாரித்தபோது, எங்களுக்கு தெரியாது எனச்சொல்லியுள்ளார் கடை உரிமையாளர். இது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசனை செய்து வழக்கு தொடரலாம்மா என ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.