Skip to main content

பஞ்சாயத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் போலீஸ் பாதுகாப்புடன் வாக்களிப்பு... பதவியேற்க நீதிமன்றம் தடை!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

Candidate contesting for the post of Panchayat leader votes with police security ... Court bans him from taking office!

 

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நாயக்கனேரி ஊராட்சி. இந்த மலைக்கிராமத்தில் 3440 வாக்காளர்கள் உள்ளனர்.

 

இந்த ஊராட்சியின் மன்ற தலைவர் பதவி பட்டியலின பெண்ணுக்கு என இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு வெளிவந்தது முதல் அதனை மாற்ற வேண்டும், தங்கள் கிராமத்தில் சில குடும்பங்கள் மட்டுமே பட்டியலினம் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

 

இந்நிலையில் அந்த ஊராட்சியிலுள்ள 9 வார்டுகளில் ஒருவர்கூட போட்டியிடாமல் தேர்தலைப் புறக்கணித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் இந்துமதி, திமுக சார்பில் விஜயலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளராக முனியம்மாள் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்குக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 3 வேட்பாளர்களும்  வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றனர்.

 

Candidate contesting for the post of Panchayat leader votes with police security ... Court bans him from taking office!

 

இந்நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பெண் வேட்பாளர் இந்துமதிக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9 ஆம் தேதி மாதனூர் ஒன்றியத்தில் நடைபெற்றது. காமனூர்தட்டு பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு மையத்தில் தனது கணவர் பாண்டியனுடன் வந்து தனது வாக்கினைச் செலுத்தினார். பின்னர் போலீஸ் வேனில் பாதுகாப்புடன் வீடு திரும்பினார்.

 

இந்நிலையில் நாயக்கனேரி ஊராட்சி தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட   பட்டியலின பெண்  பதவியேற்கத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

 

நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள்  தலைவர், முன்னாள் வார்டு உறுப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் கூட  கிராமத்தில் இல்லாத நிலையில், நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது குறித்துத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அதுவரை தலைவர் பதவியேற்பிற்குத் தடை விதித்தார். அடுத்த விசாரணை நவம்பர் 1 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.