Skip to main content

4 கோடி பணம், 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளியைக் குவித்த பொறியாளர்...  

Published on 15/10/2020 | Edited on 16/10/2020

 

 4 crore cash, 3 kg gold, 10 kg silver hoarded engineer ...

 

வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் 500க்கும் அதிகமான தோல் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பொருள் உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் கழிவுநீர், கெமிக்கல் நீரை பாலாற்றில் விடுவதால் விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது. தொழிற்சாலைகளின் பொறுப்பற்ற தன்மையைக் கவனத்தில் கொண்டு விவசாயிகள், பொதுநல அமைப்புகள் போராட்டத்துக்குப் பின் ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, பேரணாம்பட்டு நகரங்களில் அரசின் உதவியோடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டன. இந்த கழிவுநீர் நிலையத்துக்கு கம்பெனிகள் நீரை அனுப்பும்போது, எவ்வளவு நீரை அனுப்புகிறார்களோ அதற்கு உண்டான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணம் செலுத்தாமல் இருக்க பாதி நீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பும் 60 சதவித கம்பெனிகள், மீதி நீரை பாலாற்றில் இரவுகளில் திறந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட கம்பெனிகளைக் குறிவைத்து இந்த மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயல்பட்டு, லஞ்சமாக வாங்கி குவிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. அந்த குற்றச்சாட்டு 100 மடங்கல்ல 200 மடங்கு உண்மை என்பதை நிரூபித்துள்ளார் ஓர் உயர் அதிகாரி.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மைச் சுற்றுச்சூழல் பொறியாளராக வேலூர் மண்டல அலுவலகத்தில் பணியாற்றியவர் பன்னீர்செல்வம். வேலூர் மண்டலத்தில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வரும்.

இந்த மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகளைப் புதியதாகக் கட்டுதல், புதுப்பித்தல் போன்றவை இந்தத் துறையின் கீழ்தான் வரும். அப்படி புதியதாக தொடங்க, புதுப்பிக்க வருபவர்களிடம், ஒரு ஃபைல்க்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளார் பன்னீர்செல்வம். இதுபற்றிய புகார் லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்றது.

அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொறியாளர்கள் மூலமாகவே வாங்குவார் பன்னீர்செல்வம். அவர்கள் தான் இவரின் ஏஜென்ட். மாதம் இருமுறை இவருக்கான தொகையை அந்தந்த மாவட்டத்தில் இருந்து அதிகாரிகள் கொண்டு வந்து தந்துவிடவேண்டும். லஞ்சத்தை வசூல் செய்யவே மீட்டிங் எனச்சொல்லி வரவைப்பது வாடிக்கையாம்.

அந்த பணத்தையும் இவர் நேரடியாக வாங்கமாட்டார். இதற்காக வேலூரில் வாடகைக்கு எடுத்துள்ள வீட்டில் கொண்டுபோய் தரவேண்டும். அங்கே வசூலிக்க ஒரு ஊழியரை நியமித்துவிடுவாராம். அவர்கள் வசூலித்து இவர் வந்ததும் தந்துவிடவேண்டுமாம். 50 லட்ச ரூபாய் சேர்ந்ததும், அந்தப்பணத்தை ராணிப்பேட்டையில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு பாதுகாப்பாகக் கொண்டு போய் சேர்த்துவிடுவாராம். இதுபற்றி தெளிவாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தந்துள்ளனர். அவர்களும் இவரை கடந்த சில நாட்களாகக் கண்காணித்து வந்துள்ளனர்.  

 

Ad



அதனைத் தொடர்ந்து, வேலூர் காட்பாடி நகரில் உள்ள இவரது வாடகை வீட்டில் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி இரவு, வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ஹேமசித்ரா தலைமையிலான அதிகாரிகள் நுழைந்தனர். 13, 14 மற்றும் 15-ஆம் தேதி காலை வரை அலுவலகம், வீடுகளில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் கட்டுக்கட்டாகப் பணத்தை எடுத்துள்ளனர்.


அதேபோல் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள அவரது சொந்த வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டிலும் கோடிகளில் பணத்தை எடுத்துள்ளனர். சுமார் 4 கோடி ரூபாய் பணம், 3.5 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக அத்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அறிக்கை அனுப்பினர். அந்த அறிக்கையின் அடிப்படையில் பன்னீர்செல்வத்தை அக்டோபர் 15-ஆம் தேதி மாலை, இடைக்கால பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்