ADVERTISEMENT
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்துள்ள பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்று, அங்கிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுவாமி சிவானந்தா சாலை வழியாகச் சென்றார். அப்போது அங்கு வழியில் இருந்தவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments