ADVERTISEMENT
ADVERTISEMENT
தந்தை பெரியாரின் 143 பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக நீதியைக் காக்கவும், சாதி வேற்றுமையைக் களையவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அவரின் பிறந்த தினத்தைத் தமிழக அரசு கடந்த வாரம் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என அறிவித்தது.
அதன்படி இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூகநீதி நாள் உறுதி மொழி எடுக்கப்பட இருக்கிறது. தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். அதைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதி மொழி எடுக்கப்பட இருக்கிறது.
Show comments