Skip to main content

பெரியார் சிலை அவமதிப்பு - 2 பேர் மீது குண்டாஸ்

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

ரக

 

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள பெரியார் சிலை கடந்த 9 ஆம் தேதி அவமதிப்பு செய்யப்பட்டது. இரவு நேர ஊரடங்கால் மக்கள் நடமாட்டமில்லாத பகுதியிலிருந்த பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதோடு சிலை மீது காவிநிறப் பொடி கொட்டப்பட்டிருந்தது. இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் யார் எனக் கண்டறிந்து உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. இந்நிலையில் இந்த சிலை அவமதிப்பு தொடர்பாக கோவை வெள்ளளூரைச் சேர்ந்த இந்து முன்னணி ஆதரவாளரான அருண் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜை போலீசார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். இந்நிலையில் அவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்