ADVERTISEMENT
தமிழக முதலமைச்சராக முதல்முறையாக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின், பதிவியேற்றதும் முதல் கையெழுத்தாக ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், ஒன்றான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுகும் கரோனா நிவாரண உதவித் தொகையாக 4,000 ரூபாய் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக அரசு அறிவித்த கரோனா உதவித் தொகையின் முதல் தவணையாக 2,000 ரூபாய் இன்றுமுதல் (15.05.2021) பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை அயனாவரத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் உதவித்தொகை வாங்குவதற்கு மக்கள் காத்திருந்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments