மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன். அதே தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேஷ் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கின்ற நிலையில் இருகட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்தநிலையில் ராஜ் சத்யனுக்கான அம்மாவட்ட அமைச்சர் செல்லூர் ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளார். இந்தநிலையில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க பணப்பட்டுவாடா செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மதுரையிலுள்ள ஒரு பங்களாவில் கோடி கணக்கில் பணம் வைக்கப்பட்டு கவர்களில் பிரித்து வைக்கப்படுகிறதாம். இந்த தகவல் காவல்துறைக்கும் தெரிந்ததில் காவல்துறையையும் சரி செய்து விட்டார்களாம். மதுரையிலுள்ள ஒரு காவல்நிலையத்திலேயே கவர் பிரித்து வைக்கும் பணி நடக்கிறதாம்.
ராஜ் சத்யனுக்கு சீட் தரக்கூடாது என்று சொன்ன அக்கட்சியின் எதிர் கோஷ்டிதான் இந்த தகவலை கசிய விட்டுள்ளது.
ADVERTISEMENT
Show comments