ADVERTISEMENT

ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அ.தி.மு.க உறுப்பினரே! ஆதாரத்துடன் வெளியிட்ட தி.மு.க எம்.எல்.ஏ!

03:37 PM Oct 15, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் துணை தலைவர் மோகன் ராஜ், தி.மு.க உறுப்பினர் என்று அமைச்சர் பெஞ்சமின் கடந்த இரு நட்களுக்கு முன் கூறினார். இந்நிலையில், அவர் தி.மு.க உறுப்பினர் இல்லை என்றும் அ.தி.மு.க உறுப்பினர் என்பதற்கான ஆதாரத்துடனும் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வெளியிட்டார்.

இவருடன் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை கி சரவணன், புவனகிரி கிழக்கு ஒன்றியச் செயலாளர் மனோகர், புவனகிரி பேரூர் செயலாளர் கந்தன், ஊராட்சி செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் இருந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT