Skip to main content

கடலூர் மா.ஊராட்சி குழு தலைவர் பதவி பாமகவுக்கு கிடைக்குமா? 

Published on 08/01/2020 | Edited on 09/01/2020

 

கடலூர் மாவட்டத்தில் 29 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் திமுக கூட்டணி 14 இடங்களிலும், அதிமுக கூட்டணி 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் 4வது வார்டில் முத்துகிருஷ்ணன் என்பவரும், 13வது வார்டில் விருத்தாசலம் டாக்டர் தமிழரசி 24வது வார்டிலும், பரங்கிப்பேட்டை ரிஸ்வானா பர்வீன் 24 ஆவது வார்டிலும் நின்று வெற்றி பெற்றுள்ளனர்.

 

PMK


மாவட்ட குழு தலைவர் பதவியை பாமவிற்கு வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் ஆலோசனையின் பேரில் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகிய இருவரையும் சந்தித்து பேசியுள்ளனர்.
 

அந்த பேச்சின்போது வடமாவட்டங்களில் மாவட்ட குழு தலைவர் பதவிகளில் 3 கேட்டுள்ளனர். அதிமுக தரப்பில் இரண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அதில் கடலூர் மாவட்டம் ஒன்று. இந்த நிலையில் கடலூர் மாவட்ட குழு தலைவர் பதவியை பாமக கவுன்சிலர் டாக்டர் தமிழரசிக்கு வழங்க வேண்டும் என்று அக்கட்சி முடிவு செய்துள்ளது. 


 

 

காரணம். டாக்டர் தமிழரசி விருத்தாசலத்தில் அரசு  மருத்துவ பணியில் சிறப்பாகப் பணியாற்றியதோடு, மதுவுக்கு எதிராக மிக தீவிரமான  பல போராட்டங்களை நடத்தியவர். மேலும் ராமதாஸ் குடும்பத்திற்கு ஒரு விதத்தில் நெருங்கிய உறவினரும்கூட. எனவே தமிழரசிக்கு தலைவர் பதவியும் கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ரிஸ்வானா பர்வீனுக்கு துணைத் தலைவர் பதவியும் வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகள் இரு கட்சியினரும் முன்வைத்துள்ளனர்.


 

 

இந்தநிலையில் திமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அதிமுக கூட்டணியை உடைத்து திமுக தலைமையில் மாவட்ட குழு தலைவர் பதவியை பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. அதிமுக கவுன்சிலர்கள் சிலருடைய ஆதரவும், தேமுதிக கவுன்சிலர் ரிஸ்வானா பர்வீன் ஆகியோரின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்க இருப்பதாக திமுக தரப்பில் பேசப்படுகிறது. இப்படி அதிரடியாக நடக்கவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 
 

பண பலம், படை பலம், அதிகார பலம் கொண்ட ஆளுங்கட்சி அமைச்சர் சம்பத் மாவட்ட செயலாளராக உள்ள கடலூரில், தி.மு.க. மா.செ. எம்.ஆ.ர்.கே. பன்னீர்செல்வம் இதுபோன்ற திருப்பத்தை ஏற்படுத்தி விடுவாரா என்ற பயம் அதிமுகவிடம் உள்ளது. ஆனால், அதுபோன்று நடக்காது. புரளி கிளப்புகிறார்கள் என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் இதுபோன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள் என்கின்றனர் திமுகவினர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.