ADVERTISEMENT

ஓபிஎஸ் சொத்துகுவிப்பு புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவு -தமிழக அரசு

11:03 AM Jul 25, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துகுவிப்பு புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் உயர்நிதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த இந்த வழக்கில் துணை முதல்வர் ஓபிஎஸ் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் முறைகேடாக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. ஆனால் இது குறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை விசாரணை நடத்தவில்லை எனவே உடனடியாக விசாரணை நடந்தவேண்டும் என புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அறப்போர் இயக்கம் சார்பாகவும் ஓபிஎஸ் மீதான சொத்துகுவிப்பு புகாரை விசாரிக்கவேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இன்று இந்த இரு வழக்குகளும் உயர்நிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த புகாரின் பேரில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் விஜயநாராயன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT