ADVERTISEMENT

1500 பேர் மட்டுமே திமுக அல்ல;இணைத்துக் கொண்டால் ஸ்டாலினை ஏற்றுகொள்ள தயார் - முக அழகிரி

10:59 PM Aug 30, 2018 | annal

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் நடைபெறவுள்ள அமைதிப் பேரணி தொடர்பாக தொடர்ந்து 7-வது நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் மதுரையிலுள்ள தனது வீட்டில் முக அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் 'திமுக-வில் இணைத்துக் கொள்ள தயார் என்றால் முக ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தயார்' என்று முக அழகிரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

'திமுக-வின் பொதுக்குழுவிலுள்ள 1500 பேர் மட்டுமே திமுக அல்ல. உண்மையின் பக்கமே தொண்டர்கள் அனைவரும் உள்ளனர்.

வருகின்ற செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள அமைதிப் பேரணியில்.ஒரு லட்சத்திற்கும் குறையாத எண்ணிக்கையில் தொண்டர்கள் பங்கேற்பர். இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் எங்களுக்கு பெரிதாக எந்த நெருக்கடியும் தரவில்லை.

திமுக-வுடன் இணைவதற்காகவே நாங்கள் போராடுகிறோம். இதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.

எங்களை இணைத்துக் கொள்ளத் தயார் என்றால் முக.ஸ்டாலினை தலைவராக.ஏற்றுக் கொள்ள நாங்களும் தயார்' என்றுகூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT