Skip to main content

திருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி!!

Published on 22/09/2018 | Edited on 22/09/2018

அழகிரி தனது அடுத்தஅரசியல்நிகழ்வாக இடைத்தேர்தல் நடக்க இருக்கும் திருவாரூருக்கு நாளை 23ம் தேதி வருகிறார்.  அதற்கான ஏற்பாடுகளை தனது ஆதரவாளர்கள் சிலர் கவனித்துவருகின்றனர். அழகிரியின் வருகை பலரையும் ஆச்சர்யத்துடன் கூடிய எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

 

alagiri

 

நாளை திருவாரூர் வரவிருக்கும் அழகிரி காட்டூரில் இருக்கும் தனது பாட்டியின் சமாதிக்கு சென்று மறியாதை செய்கிறார். பிறகு பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செய்துவிட்டு தெற்கு வீதியில் இருக்கும் ஏகேஎம் திருமணமண்டபத்தில் தனது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதன் பி்ன்னர் அங்கு தனது ஆதரவாளர்களை தனிமையில் சந்தித்து பேசுகிறார். அங்கு தனக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் ஆதரவை பொறுத்தே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாமா என்கிற முடிவில் இறங்க இருக்கிறாராம்.

 

திமுக தலைவர் கலைஞரின் சொந்த தொகுதியனா திருவாரூர் அவர் மறைவையடுத்து இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. திருவாரூர் தொகுதியில் போட்டியிட மு.க.அழகிரி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவிக்கிடந்தன. கலைஞர் உயிரோடு இருக்கும்வரை திருவாரூருக்கு வராத அழகிரியின் திடிர்வருகையின் மூலம் அந்தபேச்சுக்கு முற்றுப்புள்ளிவைக்க இருக்கிறது.

 

கலைஞரின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியை கடந்த  2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு எத்தனையோ முறை அழகிரி முயன்றும் மீண்டும்அவரால் திமுகவில் இணையமுடியவில்லை.
   
கடந்தமாதம் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்புகாரணமாக கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் வேகவேகமாக சென்னைக்கு வந்தார்.  கலைஞரின்  இறுதிநிகழ்ச்சிவரை ஸ்டாலினோடு இனைந்தே ஒவ்வொருநிகழ்விலும் இருந்தார்.பிறகு கலைஞர்இறந்தமூன்றாவதுநாளே திமுகதொண்டர்கள் அனைவரும் எனக்கு பின்னால்இருக்கிறார்கள் என ஒருபோடுபோட்டார். 


அதோடு நிற்காமல் செப்டம்பர் 5 ம்தேதி சென்னையில் தனது ஆதர்வாளர்களோடு ஊர்வலம் போவதாக அறிவித்து அதில் 1 லட்சம் பேர் கலந்துகொள்ளுவார்கள் என அறிவித்து, ஊர்வலத்திற்கு சொன்ன அளவில் கூட்டத்தை காட்டாமல் புசுவானமாகினார்.


பிறகு தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தியே வருகிறார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க ஸ்டாலின்  உள்ளிட்ட தலைவர்கள் தயாராக இல்லை. இந்த சூழலில்  28 ஆம் தேதி   திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின்  தலைவரானார் ஸ்டாலின். அதனை தொடர்ந்து திருவாரூர் தொகுதிக்கும், கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கு சென்றுவிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுவிட்டே சென்றிருக்கிறார். 

 

இதற்கிடையில் அழகிரி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அதற்கு டி.டி.வி தினகரனிடம் ஆதரவு கேட்டதாகவும் திருப்பரங்குன்றம் தொகுதியில்  டிடிவி அணியினருக்கு அழகிரி ஆதரவு அளிப்பதாகவும்,   செய்திபரவிக்கிடக்கின்றன. இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் திருவாரூர் தொகுதியில் தனக்கு உள்ள செல்வாக்கு எப்படி என்பது  குறித்து அறிந்து கொள்ளவே அழகிரி  வருகிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 

அவரது ஆதரவாளர் ஒருவரிடம் விசாரித்தோம், ‘’ எங்களுக்கு தனிப்பட்ட ஆதரவு என்பது குறைவுதான். நன்னிலம் பகுதியில் திமுக மா.செ பூண்டிகலைவாணன் மீது உள்ள அதிர்ப்தியால் சிலர் உள்ளனர்.  அவர்களைதான் சென்னையில் நடந்த ஊர்வலத்திற்கும் பஸ் பிடித்து அழைத்து சென்றோம், அவர்களை தான் அழகிரி கலந்துகொள்ளும் கூட்டத்திற்கும் அழைத்துவரவுள்ளோம், அழகிரியும் ஸ்டாலினும் ஒன்றாகவேண்டும் என்கிற கோரிக்கையைதான் அவரிடம் வைக்க இருக்கிறோம். ’’என்றனர். எது எப்படியோ திருவாரூரிலும் அழகிரியின் சாயம் வெளுக்க போகிறது என்கிறார்கள் திமுகவினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.