ADVERTISEMENT

ஆன்லைன் லாட்டரி; இருவர் கைது! 

03:02 PM Apr 01, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மணப்பாறை அக்ரஹாரம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் மணப்பாறை அத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் இணையதளம் மூலம் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த செல்போன், 2300 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.


அதேபோல் மணப்பாறை காய்கறி மார்கெட் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்தபோது, அப்பகுதியில் கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT