Skip to main content

கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் வெட்டு; பதறவைத்த கஞ்சா இளைஞர்களுக்கு மாவு கட்டு

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

In one night, 9 places were hacked and cell phones stolen; Ganja is a dough for young people

 

ஒரே இரவில் சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 9 இடங்களில் கத்தியால் வெட்டி செல்போன் பறித்த கஞ்சா இளைஞர்களை போலீசார் செய்துள்ளனர்.

 

சென்னை தேனாம்பேட்டையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை திருட்டு வாகனத்தில் சென்ற கஞ்சா இளைஞர்கள் இருவர் ரோட்டில் கண்ணில் சிக்கியவர்களிடம் எல்லாம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றனர். சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் கடந்த 20-ஆம் தேதி அதிகாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர்கள் சிலரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக புகார்கள் எழுந்தது. இதேபோல சென்னையில் பல இடங்களில் இந்த இளைஞர்கள் கைவரிசை காட்டியதாக புகார் எழுந்த நிலையில் இவர்களை பிடிப்பதற்காக போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்தனர்.

 

இது தொடர்பாக 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் சென்னை தேனாம்பேட்டை பகுதியிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதி வரை திருட்டு வாகனத்தில் சென்று பட்டாகத்தியை காட்டி செல்போன் பறித்துவிட்டு பின்னர் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து வியாசர்பாடி வரை சென்ற அந்த இரு இளைஞர்களை கண்டறிய சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்த பரத், ஏழுகிணறு சண்முகராயன் தெருவை சேர்ந்த தனுஷ் ஆகி இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சா போதைக்கு அடிமையான இருவரும் யானைகவுனி காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தைத் திருடிக் கொண்டு அதன் மூலம் சென்னையின் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், நந்தம்பாக்கம் என ஸ்ரீபெரும்புதூர் வரை 9 இடங்களில் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர்.

 

விசாரணையின் பொழுது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்ட இருவருக்கும் போலீசார் வழக்கம் போல மாவு கட்டு போட்டுள்ள நிலையில்  இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையிலடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.