ADVERTISEMENT
காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை வழியாக பெங்களூர் செல்லக்கூடிய ரயிலில் பட்டிமன்ற பெண் பேச்சாளரான யோகதர்ஷினி என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார். ரயிலில் அதிகம் கூட்டமில்லாத நிலையில் அவர் எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த போதை ஆசாமி ஒருவர் ஆபாச சைகையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
ADVERTISEMENT
இதனை அறிந்து கொண்ட யோகதர்ஷினி உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். உடனடியாக அங்கு வந்த அதிகாரிகளிடம் நடந்தவற்றை தெரிவித்தார். அதன் பிறகு அதிகாரிகள் மற்றும் சக பயணிகள் அவரை பிடித்து நெய்வேலியில் உள்ள ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள பெண் பட்டிமன்ற பேச்சாளர் யோகதர்ஷினி, 'ரயிலில் தவறான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது பெண்கள் துணிச்சலோடு புகார் செய்ய வேண்டும்' என்ற கருத்தை வைத்துள்ளார்.
Show comments