ADVERTISEMENT

நெருங்கும் மாண்டஸ்; புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

02:50 PM Dec 08, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. இப்புயல் காரைக்காலுக்கு கிழக்கு-தென்கிழக்கில் 500 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 580 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஸ்ரீஹரிகோட்டா மற்றும் புதுச்சேரி இடைப்பட்ட கடலோர பகுதிகளில் 9 ஆம் தேதி இரவு அல்லது 10 ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT