ராணுவ கொள்முதல் பிரிவு செயலாளர் அஜய்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ராணுவ தொழில் வழித்தட தொடக்க விழா திருச்சியில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வருகிற 20-ஆம் தேதி திருச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ADVERTISEMENT
சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய ஊர்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் வழித்தடம் அமையும் என்றும், கோவை ராணுவ தளவாட கண்டுபிடிப்பு மையம் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். விழாவின் போது புதிய முதலீடுகள், புதிய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments