Skip to main content

தொழிற்சாலைகளை மூடும் எண்ணம் இல்லை - மத்திய ராணுவ அமைச்சர் அறைகூவல் ! 

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
n

 

திருச்சியில்  மத்திய இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்ற பாதுகாப்பு வழிதடம் அமைக்கப்படும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் 3100 கோடி ரூபாய் முதலீட்டில் தனியார் நிருவனங்களை இந்த துறையில் இணைந்து செயல்படுவதற்கான அடிப்படை நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. 

 

உலகில் அதிக அளவில் ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. மேக் இன் இந்தியா திட்டத்தின் படி, ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. 

அதன்படி, தமிழகம் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) அறிவிக்கப்பட்டிருந்தது. உத்தரப்பிரதேச பாதுகாப்பு வழித்தடம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தட தொடக்க விழா, திருச்சியில் ஜனவரி 20 நடைபெற்றது. சென்னை, சேலம், ஓசூர், கோவை, திருச்சி ஆகிய நகரங்களை உள்ளடக்கிய இந்த பாதுகாப்பு வழித்தட திட்டத்தை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி வைத்தார். 

 

n


அதேபோல், கோவை கொடிசியாவில், ராணுவத் தளவாடப் பொருட்கள் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தை அவர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், சுமார் மூன்றாயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியானது. 


நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீத்தாராமன், "தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது கனவை பிரதமர் மோடி தான் நிறைவேற்றி வருகிறார். கோவாவில் நடந்த ராணுவ கண்காட்சியை தமிழகத்தில் நடத்தவும் மோடி அனுமதி வழங்கினார். தமிழக அரசின் ஒத்துழைப்போடு மத்திய அரசு இத்தகைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலையும், அதேபோல் கோவையில் உள்ள தொழிற்சாலையும் சிறப்பாக செயல்படுகிறது. அதற்குள்ளாக தொழிற்சாலைகளை மூடப்போகிறோம், எல்லோரும் வேலை இல்லாமல் போக போகிறது என்று பொய் பிரச்சாரங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் சொல்கிறேன். இத்தகைய தொழிற்சாலைகளை மத்திய அரசு மூடிவிடும் என்று தவறான பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. அத்தகைய திட்டமே மத்திய அரசிடம் இல்லை. எந்த தொழிற்சாலைகளையும் மூட மாட்டோம். 

 

n


பல்வேறு ராணுவத் தளவாட தொழில் நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் பொருட்களை தயாரிக்க திருச்சியில் வசதிகள் உள்ளன. இந்த வாய்ப்பை மாநில அரசும், திருச்சியில் உள்ள தொழில் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நிலை மாறினால் ராணுவ பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே ஏற்படாது. 

 

ரஃபேல் ஒப்பந்தத்தை பொறுத்தவரை ஆப்செட் (offset) என்ற திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆப்செட் திட்டம் தற்போது துவங்கப்பட்டுள்ள ராணுவ வழித்தட திட்டத்திற்கு உதவியாக இருக்கும். இந்த வழித்தடத்தில் புதிய தொழில் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது" என்று பேசினார். 

 

இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதி, எம்பி.க்கள் குமார், ரத்தினவேல், மருதைராஜா, திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, ராணுவ உற்பத்தித் துறை செயலாளர் அஜய் குமார் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் சுமார் 500 நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அப்பன்' என்பது கெட்ட வார்த்தையா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி  

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
Is 'appan' a bad word?-Interview with Minister Udayanidhi Stalin

‘அப்பன்’ என்பது கெட்ட வார்த்தையா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வினவியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ''மழைக்கு முன் 92 சதவீதம் வடிகால் பணி முடிந்தது என்று கூறினார்கள். மழைக்குப் பின் 45 சதவீதம் பணிகளே நிறைவு என மாற்றி பேசினார்கள். 4000 கோடி என்னவானது? 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் மாநில அரசு கற்றுக் கொண்ட பாடம் என்ன?'' தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது. இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்ததில்லை. அதற்கான வழக்கம் இல்லை'' என பேசியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நான் அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறேன். மக்கள் வரிப்பணத்தைத்தானே கேட்கிறேன் என  பேசியதை தப்புன்னு சொல்றாங்களா. நான் வேணும்னா இப்படி சொல்லட்டுமா. மாண்புமிகு மத்திய அமைச்சரோட மரியாதைக்குரிய அப்பா சொத்தை நாங்க கேட்கல. தமிழக மக்கள் கட்டும் வரிப் பணத்தை தான் கேட்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜனும் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

 

Is 'appan' a bad word?-Interview with Minister Udayanidhi Stalin

இந்நிலையில், சென்னையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ''நான் ஏதாவது கெட்ட வார்த்தை சொன்னேனா? மரியாதைக்குரிய நிதியமைச்சரிடம் மீண்டும் மரியாதையாக நான் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய சொந்த விஷயத்திற்காக கேட்கவில்லை. தமிழ்நாடு மக்கள் கடும் பேரிடரில் உள்ளனர். பேரிடர் என்றும் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். சோசியல் மீடியாவில் கூட ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். 10 வருட பாஜக ஆட்சியே கடும் பேரிடர் என்பதால் இதனை தனியாக பேரிடர் என்று பார்க்க மாட்டோம் என்று சொல்கிறோம் என பதிவிட்டிருந்தார். அதுபோல் தயவுசெய்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்காதீர்கள். எதை வைத்து அவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

மத்திய குழுவை அமைத்தார்கள். அவர்கள் எல்லாருமே இங்கு வந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று சொல்லிவிட்டு சென்றார்கள். ஆனால் நிதியமைச்சர் இதனை முழுவதுமாக அரசியல் ஆக்க முயற்சிக்கிறார். நான் யாரையும் மரியாதைக் குறைவாக பேசியதில்லை. தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக சென்னை மக்கள், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்கள், தென் தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. நேற்று மாலை வரை ஏரல் பகுதியில் இருந்தேன். நேற்று முன்தினம் காயல்பட்டினம் சென்று இருந்தேன். இன்னும் பாதிப்பில் இருந்து முழுமையாக வெளியே வரவில்லை. எனவே மீண்டும் நிவாரண தொகையை கொடுங்கள் என மரியாதையாக கேட்கிறேன். நான் என்ன அநாகரிகமாக பேசி விட்டேன். 'அப்பன்' என்பது கெட்ட வார்த்தையா? தெரியாமல் தான் கேட்கிறேன்.  மரியாதைக்குரிய ஒன்றிய நிதியமைச்சர் உடைய மரியாதைக்குரிய அப்பா, வணக்கத்திற்குரிய அப்பா, மாண்புமிகு அப்பா எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்'' என்றார்.

Next Story

நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
 Annamalai meeting with Nirmala Sitharaman

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கான தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்தார். நேற்று திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு வெளியாகி இருந்த நிலையில், இந்த சந்திப்பில் அது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் யூகங்கள் கிளம்பியுள்ளன.

இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.