ADVERTISEMENT

காற்றுக்காக கதவை திறந்துவைத்த வேளையில் ஒரு மாத குழந்தை திருட்டு! வேளச்சேரியில் பரபரப்பு

04:10 PM Oct 06, 2018 | kalaimohan

காற்றுக்காக கதவை திறந்துவைத்து தூங்கிய வேளையில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை வீடு புகுந்து மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் வேளச்சேரியில் ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் தரைதளத்தில் வசித்து வரும் வெங்கண்ணா உமா தம்பதியருக்கு கடந்த மதாம் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ADVERTISEMENT

நேற்று காற்று வரவில்லை என குழந்தையின் பெற்றோர்கள் கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர். அதிகாலை 5 மணிக்கு எழுந்து பார்க்கையில் அருகில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த இருவரும் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வேளச்சேரியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிகாலையில் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை மார்பில் அணைத்தபடி சென்றதை கண்டுள்ளனர். இதனால் அந்த பெண்தான் குழந்தையை திருடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்க அந்த தெரு மற்றும் அந்த பெண் சென்ற சாலை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

காற்றுக்காக கதவை திறந்த வைத்த நேரத்தில் குழந்தையை வீட்டிற்குள் புகுந்து திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT