Skip to main content

அப்பாவின் அலட்சியம். - குழந்தை நீரில் மூழ்கி பலி

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவருக்கு திருமணம் ஆகி பிந்து என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 6 வயதில் தயாநிதி, இரண்டரை வயதான ஹரிபிரசாத் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சரவணகுமார் அதே பகுதியில் சர்தார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 6 மாதமாக கூலி வேலை செய்து வருகிறார். 

 

death

 

இன்று மார்ச் 13 ந்தேதி விவசாய நிலத்தில் உள்ள தென்னமரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது மகன் ஹரிபிரசாத் விவசாய கிணற்றின் அருகில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராது வகையில் குழந்தை ஹரிபிரசாத் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளான்.

 

 

நீண்ட நேரமாக குழந்தையின் சத்தம் வராததால் அதிர்ச்சி அடைந்த சரவணகுமார் இங்கும் அங்கும் தேடி இறுதியாக தண்ணீர் தொட்டியில் பார்த்த போது குழந்தை நீரில் முழுகி, மயங்கி நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் குழந்தையை தொட்டியில் இருந்து தூக்கிக்கொண்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோது, பணியில் இருந்த மருத்துவர்கள் பரிசோதித்தபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

death

 

இந்த தகவல் ஆம்பூர் நகர போலீசார்க்கு தெரிவிக்கப்பட்டது. போலிஸார் மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் பிரேதத்தை கைபற்றினர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.