இசக்கி சங்கர் தனது வீட்டின் அருகே உள்ள மாற்று சமுதாயத்தை சார்ந்த ஒரு பெண்ணை இரண்டு வருடமாக காதலித்து வந்திருக்கிறார். இரண்டு பேரும் மனமொத்த காதலர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களின் காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே இவர்களின் ரகசிய சந்திப்பு பற்றி பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமான பெண்ணின் குடும்பத்தினர் இசக்கி சங்கரின் குடும்பத்தாரோடு வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்ததாம். அப்போதே சிலர் தலையிட்டு இவர்களுக்குள் சமாதானம் ஏற்படுத்தியதாக தெரிகிறது. மேலும் அந்த மத்தியஸ்தர்கள் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி இரண்டு குடும்பத்தாரிடமும் பேசி ஒப்புக்கொள்ள வைத்தார்களாம். இதில் பெண்ணின் தந்தைக்கு உடன்பாடு இல்லையாம்.ஆனாலும் இதற்கு அவர் ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த முடிவை பெண்ணின் உறவினர்கள் எதிர்த்ததாக சொல்லப்படுகிறது. காரணம் இந்த பெண்ணின் உறவினர் ஒருவர் இந்த பெண்ணை திருமணம் முடிப்பதற்காக விரும்பியுள்ளாராம். இந்த நிலையில் இந்த பயங்கர கொலை இன்று காலை நடந்திருக்கிறது. விசாரணைக்காக போலீசார் அந்த பெண்ணின் தந்தையை காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் இந்த படுகொலை சம்பவம் ஆணவக்கொலை காரணமா அல்லது ஒருதலை காதல் காரணமா அல்லது வேறு பகைமை காரணமா என மூன்று கோணங்களில் விசாரணை நடப்பதாக தொடர்புடைய போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
இதேபோல் கடந்த 18 ஆம் தேதி அன்று மேலப்பாலாமடை கிராமத்தில் பால்துரை என்ற வாலிபர் தலை துண்டாக வெட்டி எடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இன்று இன்று வாலிபர் இசக்கி சங்கர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த கொலைகளால் பீதி பற்றியிருக்கிறது.