ADVERTISEMENT

குடியிருப்பு பகுதி அருகே சுற்றி திரிந்த மலைப் பாம்பு! 

03:10 PM Dec 02, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா கள்ளக்காம்பட்டி கிராமத்தில் குடியிருப்பு வீடுகளுக்கு அருகில் மலைப்பாம்பு ஒன்று சுற்றிவந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், 8 அடி நீளமுள்ள மலைப் பாம்பைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிக்கப்பட்ட மலைப் பாம்பை வனத்துறையினர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT