இதையடுத்து மேயர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பங்கேற்க நெல்லை மாநகராட்சியின் 55 மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சுபம் தயாந்தேராவ் தாகக்ரே நோட்டீஸ் வழங்கியிருந்தார். அதில் ஜனவரி 12 ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான கூட்டம் நடைபெறும் எனவும், அந்த கூட்டத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சியின் 55 மாமன்ற உறுப்பினர்கள் யாரும் இந்த கூட்டத்திற்கு வரவில்லை. இதையடுத்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கைவிடப்பட்டது. மேலும் “நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு குறைந்தபட்சம் அவையில் இருக்க வேண்டிய கவுன்சிலர்கள் இல்லாததால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கைவிடப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கைவிடப்பட்டதால் இனி ஒரு ஆண்டு காலத்திற்கு தீர்மானம் கொண்டுவர முடியாது” என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.