Skip to main content

சொத்துக்களை குறிவைக்கும் சொந்தங்கள்...முன்னாள் மேயர் சம்பவத்தின் அதிர வைக்கும் பின்னணி! 

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

நெல்லையின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், வேலைக்காரப் பெண் மாரியம்மாள் ஆகியோர், நெல்லை டவுணிலிருந்து ஒதுங்கியிருக்கும் ரெட்டியாபட்டியிலுள்ள உமா மகேஸ்வரியின் இல்லத்தில் கடந்த 23-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர்.

 

ex mayor incident



வெறும் நகை, பணம் திருட்டுக்காக நடந்த கொலை அல்ல என்பதை, சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பின்தான் போலீசால் உறுதிப்படுத்த முடிந்தது. இதற்கு முக்கிய துருப்புச் சீட்டாக இருந்தது உமா மகேஸ்வரி, முருக சங்கரன் ஆகியோரின் இறுதிச் சடங்கில் நடந்த மொட்டை போடும் விவகாரம்தான். திருச்செந்தூர் சாலை யில் உள்ள வி.எம்.சத்திரம் சாந்திவனத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது, உமா மகேஸ்வரிக்கு ஆண் வாரிசு இல்லாததால், யார் மொட்டை அடித்து கொள்ளி போடுவது என்ற பிரச்சனை வந்தது. மொட்டை போட்டு கொள்ளி போடுபவர்களுக்கு சொத்தில் பங்கு இருப்பதால், முருகசங்கரனின் தம்பியும் தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தின் துணைத் தலைவருமான வரதராஜன், "நான்தான் மொட்டை போடுவேன்' எனக் கூறியுள்ளார்.

 

ex mayor



ஆனால் உமா மகேஸ்வரியின் அண்ணன் மகனான மூளிகுளம் பிரபு, மகள் வயிற்று வாரிசு இருப்பதால், உமா மகேஸ்வரியின் மகள் கார்த்திகாவின் மகன்கள்தான் மொட்டை போட்டு கொள்ளி வைக்க வேண்டும் என பேசி முடித்து இறுதிக் காரியமும் நடந்துள்ளது. ஆனா லும் முருக சங்கரனின் உடன்பிறந்தவர் வழியில் ஒருவர் மொட்டை போட்டதாக போலீசுக்குத் தகவல் கிடைத்து, அந்த நபரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்தது போலீஸ். இந்த மொட்டை மல்லுக்கட்டுக்கான பின்னணி காரணம், பினாமி பெயரில் இருக்கும் உமா மகேஸ்வரியின் பிரமிக்க வைக்கும் சொத்துக்கள்தானாம்.


தூத்துக்குடி ரோட்டில் இருக்கும் அரியகுளத்தில் ஹவுசிங் போர்டிற்குச் சொந்தமான இடத்தை வாங்கி நான்கு கடைகளுடன் கூடிய பிளாட். நெல்லை வண்ணாரப் பேட்டை இன்ஜினியரிங் காலேஜுக்குப் பின்புறம் 15 சி மதிப்புள்ள வயலுடன் கூடிய நிலம். திருச்செந்தூர் சாலை சீனிவாச நகரில் 2.5 சி மதிப்புள்ள நான்கு வீடுகள்+ கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ். பாளையங்கோட்டை பல்நோக்கு மருத்துவமனை எதிரே ஒரு வீடு. இரண்டு ஏக்கர் பரப்பில் இப்போது குடியிருந்த வீடு. இந்த சொத்துக்களை சொந்தமாக்கும் முயற்சியில்தான் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்ற கோணத்திலும் விசாரணையை கொண்டு செல்கிறது தனிப்படை போலீஸ்.

சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களில் நெடுஞ்சாலைத்துறையின் ஏ.டி.யாக முருகசந்திரன் இருந்த போது, அந்த ஏரியாவின் பிரபல காண்ட்ராக்டர் ஒருவருக்கு ஏகப்பட்ட காண்ட்ராக்டுகளை ஒதுக்கி, அந்த ஏரியாவில் விளை நிலங்களை வாங்கியுள்ளார். யார், யாரிடமிருந்து நிலம் வாங்கினார், வாங்குவதற்கு உதவிய அந்த காண்ட்ராக்டர் யார் என்பதையும் தனிப்படை கண்காணிக்க ஆரம்பித்துள்ளது.

பெட்டிக்கடை, மளிகைக் கடைக்காரர்களே சி.சி.டி.வி. கேமரா வைத்திருக்கும்போது, டவுணிலிருந்து ஒதுக்குப்புறமாக வசிக்கும் உமாமகேஸ்வரியின் வீட்டில் சி.சி.டி.வி. கேமரா இல்லாதது போலீசுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முருக சந்திரனின் தனிப்பட்ட சில நடவடிக்கைகளுக்காகத்தான் சி.சி.டி.வி. கேமரா வைக்காமல் இருந்திருக்கலாம் என்பதையும், கொலையின்போது முருகசந்திரனின் மர்ம உறுப்பில் பலத்த வெட்டு விழுந்துள்ளதையும் வைத்து, அந்தக் கோணத்திலும் விசாரணையை கொண்டு செல்கின்றனர்.
  ex mayor



இதற்கிடையே வேலைக்காரப்பெண் மாரியம்மாள் மகள்களின் வாழ்வாதாரத்திற்காக தி.மு.க. அறிவித்த 1 லட்ச ரூபாயை டி.பி.எம்.மைதீன்கான் 25-ஆம் தேதி வழங்கினார். 26-ஆம் தேதி நெல்லைக்கு வந்த கனிமொழி, உமாமகேஸ்வரியின் குடும்பத்திற்கும் மாரியம்மாளின் மகள்களுக்கும் ஆறுதல் கூறினார்.
 

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.