ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்ப்பட்டு தற்போது பலத்த பாதுகாப்புகளுடன் அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நலம் கருதி ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்ட நிலையில் வேலூர் சிறையிலிருந்து ஜோலார்பேட்டை இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புகளுடன் கொண்டு செல்லப்பட்டார். ஏற்கனவே பேரறிவாளனுக்கு 2017 ஆம் ஆண்டு 2 மாத பரோல் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Show comments