Skip to main content

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்..? சிறைத்துறை தகவல்

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி உட்பட  7 பேர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்ப்பட்டுள்ளதாக செதகவல்கள் வந்துள்ளன.

 

 One month parole for perarivalan..?

 

பேரறிவாளனின் தந்தையின் உடல்நலம் கருதி ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

பரோலில் வெளியே வரும் கைதிகளைக் கண்காணிக்க ‘ஜிபிஎஸ்’ கருவி; உள்துறை அமைச்சகம் அனுமதி

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

'inistry of Home Affairs permission to GPS'device to track prisoners

 

கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி சிறைத்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் குழு, மத்திய உள்துறையிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ‘ஜாமீனில் விடுதலையாகும் சிறைக் கைதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவியைப் பொறுத்தலாம்’ என்று பரிந்துரை செய்தது. இது தொடர்பான நடவடிக்கையை காஷ்மீர் போலீசார் உடனடியாக அமல் செய்தனர். இந்த நிலையில், அனைத்து மாநிலங்களில் உள்ள சிறைவாசிகள் பரோலில் வெளியே வந்தால் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவியைப் பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

 

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள கடும் குற்றங்கள் செய்த குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். தற்காலிக விடுதலை அல்லது பரோலில் வெளியே வரும் கைதிகளைக் கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படலாம். அதேபோல், கைதிகள் தங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க இத்தகைய கருவியை அணிய வேண்டும் என்று விரும்பினால் சிறையிலிருந்து அவர்களுக்கு விடுப்பு அளிக்கலாம். 

 

சிறையிலிருந்து வெளியே சென்ற பிறகு அந்தக் கருவியை அகற்றினால், எதிர்காலத்தில் வழங்கப்படும் எந்தவொரு சிறை விடுமுறையையும் அந்த கைதிகளுக்கு வழங்கப்படுவதை ரத்து செய்யலாம். எனவே, பரோலில் விடுவிக்கப்படும் கைதிகளைக் கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகளை அந்தந்த மாநில அரசுகள் பொறுத்தலாம்” என்று தெரிவித்துள்ளது. 

 

 

Next Story

6 பேர் விடுதலை; நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்ற பேரறிவாளன்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

 6 persons acquitted; Perariwalan who directly went and welcomed

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7  பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் அதே முறைப்படி தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் நேற்று  உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து நிவாரணங்களும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ள 6 பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 6 persons acquitted; Perariwalan who directly went and welcomed

 

இந்நிலையில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை தொடர்பாக இன்று மதியம் வேலூர் மத்திய சிறைக்கும் வேலூர் பெண்கள் தனிச் சிறைக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் அனுப்பப்பட்டது. 

 

இதனைத் தொடர்ந்து 31 ஆண்டுகளுக்குப் பின் வேலூர் பெண்கள் தனிச்சிறையிலிருந்த நளினி விடுதலை செய்யப்பட்டார். பரோலில் இருந்த நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறைக்குச் சென்று தனது பரோலை ரத்து செய்ய கடிதம் வழங்கிய பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

அதே போல், புழல் சிறையிலிருந்து ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இதற்கு முன் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த பேரறிவாளன், இன்று விடுதலையான ராபர்ட் மற்றும் ஜெயக்குமாரை வரவேற்பதற்காகப் புழல் சிறைக்குச் சென்றார். சிறையிலிருந்து வெளிவந்த ராபர்ட் பயாஸை கட்டியணைத்து வரவேற்ற பேரறிவாளன், அவருடன் சிறிது நேரம் உரையாடிய பின் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.