ADVERTISEMENT
தமிழகத்தில் வேலை செய்வதற்காக வந்த வெளிமாநில தொழிலாளர்கள் கரோனா பரவலால் சொந்த ஊர்களுக்குச் செல்ல முயன்றுவரும் நிலையில், பலரும் அந்தந்த ஊர்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் வீட்டிற்குச் செல்வதற்காகக் குவிந்து வருகின்றனர். அந்தவகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழுமியிருந்த வெளிமாநில தொழிலாளர்களுக்குத் தமிழக தொழிலாளர் நலத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து உணவுகளை வழங்கினர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments