ADVERTISEMENT

விமான நிலையத்தில் உணவு சாப்பிடக் கூடாது; மணிசங்கர் ஐயரிடம் கெடுபிடி காட்டிய மேலாளர்

05:34 PM Aug 24, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர், சிறந்த எழுத்தாளர். சர்க்கரை நோய்ப் பாதிப்புடன், 80 வயதாகி விட்டதால் தற்போது மணிசங்கர் ஐயர் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்கிறார். இவர் தனது உருவினர் புஷ்பவனம் என்பவருடன் நேற்று (23.8.2022) சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்துள்ளார்.

விமான நிலைய ஓய்வறையில் காலை டிஃபன் சாப்பிடலாம் என டிஃபனையும் கையோடு எடுத்துவந்துள்ளார். ஆனால் விமான நிலைய ஓய்வறையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி வரும் 30ம் தேதி வரை ஓய்வறையில் யாருக்கும் அனுமதி இல்லை. அத்துடன் வெளியிலிருந்து கொண்டுவரப்படும் உணவையும் அனுமதிக்க முடியாது என்று விமான நிலைய அதிகாரிகள் கூறிவிட்டனர்.

இதுகுறித்து விமான நிலைய மேலாளரிடம் புஷ்பவனம் எடுத்து கூறினார். அதற்கு அவர் வேண்டுமானால் என் அறையில் அமர்ந்து சாப்பிடுங்கள் என்றதாக கூறப்படுகிறது. இதை விரும்பாத மணிசங்கர் ஐயர் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து விமான நிலைய வளாகத்திலேயே நின்றபடி காலை டிஃபனை சாப்பிட்டு விட்டு சென்னை புறப்பட்டு சென்றார். இதுகுறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் புகார் செய்வேன் என மணிசங்கர் ஐயரின் உறவினர் புஷ்பவனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT