இந்த நிலையில் தேர்தல் பரப்புரைக்காக மதுரைக்கு செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "சட்டமன்றத் தேர்தலுக்கான எங்களுடைய பிரச்சாரம் தொடங்கிவிட்டது. பல இடங்களில் அனுமதிக் கொடுத்திருக்கிறார்கள்; கடைசி நிமிடத்தில் நகரங்களுக்குள் எங்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறார்கள். சட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் பிரச்சாரம் செய்வோம். தமிழகம் சீரழிந்துவிட்டது என்பது மக்களுக்கே தெரியும்." என்றார்.