Skip to main content

கொடையில் ஓய்வு எடுக்கும் ஸ்டாலின்! (படங்கள்)

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

 


வருகிற 19 ம்தேதி திருப்பரங்குன்றம், அறவாக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் உள்பட  நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு சட்டமன்ற தொகுதிளில் சூறைவளி தேர்தல் பிரச்சாரத்தை  திமுக தலைவர் ஸ்டாலின்  அரவாக்குறிச்சியில் முடித்தார். 

 

d


அதன் பின்,  கொடைக்கானலுக்கு தனது மனைவியுடன் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க வந்த ஸ்டாலினை மாவட்ட எல்லையில் கழக துணை பொதுச் செயலாளர் ஐ‌.பெரியசாமி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையிலான  கட்சி பொறுப்பாளர்கள் சிலர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.  

 

d


அதை தொடர்ந்து  தலைவர் ஸ்டாலின் தனது மனைவியுடன் கொடைக்கானல் சென்றவர் அங்குள்ள கால்டன் ஸ்டார் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.  இப்படி கோடையில்  இரண்டு நாள் ஓய்வு எடுத்து வரும் ஸ்டாலினை கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள்  பார்க்க அனுமதி இல்லை.

 

dddd

 

சார்ந்த செய்திகள்