தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் ஆலோனைக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கராத்தே தியாகராஜன் பேச்சு திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு பாதகமானது. அவருடைய பேச்சு ஏற்புடையது அல்ல என்பது என்னுடைய கருத்து என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். கே.எஸ்.அழகிரியை சந்தித்து வருத்தம் தெரிவிக்க கராத்தே தியாகராஜனிடம் அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Show comments