Skip to main content

முழுக்கு முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி.. - கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் சென்னையில் செய்தியலாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

 

KARTHICK CHITHAMPAAM INTERVIEW

 

இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க கால்புணர்ச்சி காரணத்தால் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் ஜோடித்த வழக்கை உருவாக்கியுள்ளது. அந்த வழக்கில் உள்ள சம்பவங்கள் எல்லாம் 2008 ஆம் ஆண்டு நடந்ததாக அவர்கள் சொல்கிறார்கள். அதற்காக 2017 ஆம் ஆண்டிலே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள். ஒன்பது வருடம் கழித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள். எனக்கு இருபது தடவை எனக்கு சம்மன் கொடுத்தாச்சு ஒவ்வொரு சம்மனுக்கு நான் 10 மணி நேரம் அவங்களுக்கு முன் ஆஜராகி இருக்கிறேன். ஏன் சிபிஐ விருந்தாளியாகக்கூட 11 நாள் இருந்திருக்கிறேன். இதன்பிறகும் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வில்லையே. 

முழுக்க முழுக்க யாரையோ திருப்திப்படுத்துவதற்காக அரசியல் காரணத்திற்காக தொலைக்காட்சியில் ஒரு விஷுவல்ஸ் வருவதற்காக செய்கிறார்களே தவிர இது ஒன்றும் உண்மையான இன்வெஸ்டிகேஷன், உண்மையான சிபிஐ நடவடிக்கை மாதிரி எனக்கு தெரியவில்லை இதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
man who went to bathe in the Chidambaram temple pool drowned

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவில் பழம்பெரும் சிவன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் சனிக்கிழமை மாலை திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவில் குளத்தில் இறங்கி சுவாமி மற்றும் பக்தர்கள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் குளக்கரையில் கூடியிருந்தனர். சுவாமிக்கு குளக்கரையில் பூஜை நடந்து தீர்த்தவாரி நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பக்தர்களும் பொதுமக்களும் குலத்தில் நீராடச் சென்றனர் அப்போது கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(47) என்பவர் கோயில் குளத்தில் இறங்கி நீராடினார். சிறிது தூரம் தண்ணீரில் நீந்தி சென்று குளத்தின் நடுவே உள்ள மண்டபம் அருகே நீரில் மூழ்கியுள்ளார். மீண்டும் அவர் வெளியே வரவில்லை. 

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் நகர காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட வெங்கடேசனை குளத்தில் இறங்கி ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து ஒரு மணி நேரம் தேடிய நிலையில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.  இது குறித்து சிதம்பர நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story

விமரிசையாக நடைபெற்ற நடராஜர் கோவில் ஆருத்ரா தேர் திருவிழா

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Nataraja Temple Arudra Chariot Festival held critically

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு இருமுறை தேர் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தேர்த்திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மார்கழி ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை ஐந்து மணிக்கு சாமி, கோவில் கருவறையிலிருந்து தேருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. இதில் விநாயகர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, முருகன் உள்ளிட்ட தேர்கள் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

இதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரம் கால் மண்டபத்திற்கு சாமிகளை எடுத்துச் சென்று மகா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து நாளை மதியம் 3 மணிக்குள் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். காவல்துறை பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்பட ஏற்படாத வகையில் தீவிர காவல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.