ADVERTISEMENT

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி- கமல்ஹாசன்!!

02:17 PM Dec 22, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடாளுமன்ற தேர்தலில் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக ஏற்கனவே சுற்றிக்கை விடப்பட்டிருந்த நிலையில்,

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிற்பகல் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. செயற்குழு உறுப்பினர்கள் 18 பேர், நிர்வாக குழு உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உட்பட 24 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்று கூட்டம் நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தில் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களை எப்படி எதிர்கொள்ளவது குறித்து ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், நல்ல வழியில் நல்ல கூட்டணி அமையும். ஒத்த கருத்துடைய அரசியல் கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைக்கவேண்டும் என கட்சியும் நானும் திண்ணமாக உள்ளோம். தமிழகத்தின் மரபணுவை மாற்றியமைக்க துடிக்கும் எந்த கட்சியிடமும் கூட்டணி வைக்க மாட்டோம். கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT