Skip to main content

இன்றிலிருந்து துவங்கும் கமலின் ஆப்ரேஷன் 500? பின்னணியில் பிரசாந்த் கிஷோர்!!

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

தன்னுடைய கட்சி அறிவிப்பினை வெளியிட ராமநாதபுர மாவட்ட மண்ணைத் தொட்டவர், வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதே ராம நாதபுர மாவட்ட மண்ணைத் தொட வந்துள்ளார். இந்த முறை தனது குடும்பவிழா என அறிவித்தாலும் அவர் துவங்கவிருப்பது ஆப்ரேஷன் 500 என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.
 

kamal haasan news


ராமநாதபுரம் மாவட்டத்தினை பூர்வீகமாகக் கொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித்தலைவருமான கமலஹாசன் தன்னுடைய பிறந்தநாளில், பரமக்குடி தாலுகாவிற்குட்பட்ட கமுதக்குடி ஓல்டு இந்தியா மெட்ரிகுலேஷன் பள்ளியில் தந்தையார் சிலை திறப்புவிழா, திறன்மேம்பாட்டு மையம் திறப்பு மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடலை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பொது இடமாக இல்லாது தனியாருக்கு சொந்தமான பள்ளியில் விழா? என்ற கேள்வி எழ, " பொது வெளியில் நிகழ்ச்சி நடத்தினால் அரசியல் செய்வார்கள். அதனால் தான் இங்கு நடத்துவதாக  திட்டம். இருப்பினும், அந்த பள்ளி தற்போது கைவிடப்பட்ட பள்ளி. அது ராமநாதபுரம் பயனீர் மருத்துவமனைக்கு சொந்தமானது. முன்பு சாலையோர மோட்டலாக இருந்தது இப்பொழுது எங்கள் வசம் வந்துள்ளது.." என விளக்கம் கொடுத்தார் கட்சியின் நிர்வாகி ஒருவர்.

3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நிகழ்விடத்தில் சுமார் 2000 நபர்கள் அமரக்கூடிய அளவில் பந்தலும், 50* 20 அடி நீள அகலத்திலும் தெற்கு முகத்தில் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. அதனருகில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மைய வளாகம். இருபுறமும் குலைத்தள்ளிய வாழைத் தோரணங்களுடன் கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் என கமலஹாசனை வரவேற்கவுள்ளனர்.
 

kamal haasan news


பரமக்குடியை சேர்ந்த மாநில நிர்வாகியோ, "பரமக்குடியில் இந்தவிழாவினை நடத்துவது என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாநிலத் துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில் ராமநாதபுரம் தாஜ்மகாலில் நடைப்பெற்ற கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அத்துடன் இல்லாமல் இன்று ஆப்ரேஷன் 500 எனும் திட்டத்தினை தலைவர் அறிவிப்பார். அதாவது இன்றிலிருந்து 500 நாட்களுக்குள் கிராம் கிராமமாக சென்று கட்சிக்கென தனிக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இப்பொழுது நகர்புறத்தில் மட்டுமே வாக்கு வங்கி இருப்பதனால் கிராம வாக்குகளும் தங்களை அடையவேண்டுமென்பது இலக்கு. இதன் பின்னணியில் பிரசாந்த் கிஷோர் இருப்பது தெரியாதா என்ன?" என்கிறார் அவர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.