ADVERTISEMENT

தயாரிப்பாளர் அன்புச்செழியனின் மதுரை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

08:42 PM Feb 05, 2020 | kalaimohan

மதுரை தெற்குமாசி வீதியில் அமைந்திருக்கும் அன்புச்செழியனுக்கு சொந்தமான அலுவலகத்தில் இன்று மதியம் 2 மணி முதல் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் திடீரென அவருடைய அலுவலகத்திற்குள் நுழைந்து அனைத்து கோப்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆய்வின்தான் முடிவில் முக்கிய கோப்புகள் என்னென்ன இருக்கிறது, வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து சொல்ல முடியும் என வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்து வருகின்றனர். இந்த சோதனையானது நள்ளிரவு வரை தொடரும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன் அலுவலகத்தில் திடீரென சோதனை நடைபெற்று வருவதால் ஆளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT