ADVERTISEMENT

காதலியை தனிமையில் சந்திக்க காதலன் போட்ட பெட்ரோல் குண்டு- விசாரணையில் அதிர்ச்சி!

12:28 PM Feb 27, 2020 | kalaimohan

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் காதலியை தனிமையில் சந்திக்க காதலன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை அடுத்த அய்யம்பாளையம் பொட்டல் குடியிருப்பு பகுதியில் உள்ள மாங்காய் குடோனில் நேற்று இரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு போராடிவந்த நிலையில் தகவலறிந்து வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். இது தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த திடீர் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேலும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் சந்தேகப்படும்படி ஒரு இளைஞர் இருவர் வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சியில் இருந்த நபரான ராஜாங்கத்தை போலீசார் கைதுசெய்தனர். அந்த நபர் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் என்பதும், கொத்தனார் வேலை செய்து வருபவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ராஜங்கத்திடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்தது.

அதே அழகர் பொட்டல் குடியிருப்பை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராஜாங்கம் காதலித்து வந்ததாகவும், அவரை சந்திக்க சென்றால் அப்பகுதி மக்கள் ஏதேனும் கேள்வி எழுப்புவார்கள் என பயம் கொண்ட ராஜாங்கம் அப்பகுதி மக்களை திசை திருப்பி தன் காதலியை சந்திக்க அந்த பகுதியில் உள்ள மாங்காய் குடோன் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அவர் திட்டமிட்டபடியே திடீரென ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் ஒன்றுகூட ராஜாங்கம் அவரது காதலியை தனிமையில் சந்தித்துள்ளார்.

இளைஞர் ஏற்படுத்திய இந்த விபத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றாலும் காதலியை இடையூறின்றி சந்திக்க பெட்ரோல் குண்டு வீசி தீவிபத்தை ஏற்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்த போலீசார் ராஜாங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT