Skip to main content

கர்ப்பிணி பெண் எரித்து கொலை... விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

கர்ப்பிணியான காதலியை காதலனே எரித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் காதலியை கொலை செய்த காதலன் மற்றும் அவனது கூட்டாளி கைது செய்யப்பட்டனர். 

 

புதுச்சேரி அடுத்த ஆரோவில் முந்திரி காட்டு பகுதியில் கடந்த 30ம் தேதி தீயில் எரிந்து கருகிய நிலையில் ஒரு  கர்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

 

 

murder

 

அந்த பெண்ணை கொலை செய்து கொலையாளிகள் தீ வைத்து எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டு விசாரணையை கையில் எடுத்தனர். இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேட்டை சேர்ந்த அப்பாதுரை என்பவர் தனது சகோதரியை காணவில்லை என்று கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவரிடம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தை காட்டியபோது அது அவரது சகோதரிதான் என்று ஊர்ஜிதமானது. 

 

murder

 

murder

 

இதையடுத்து எரித்துக் கொல்லப்பட்ட பெண் புதுச்சேரி நேரு வீதியில் பாத்திரக் கடையில் வேலை பார்த்து வந்த லட்சுமி என்பது தெரியவந்தது. தனது தந்தை இறந்துவிட்டதால் குடும்ப கஷ்டத்தை போக்க லட்சுமி வேலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. கடையில் விசாரித்தபோது கடந்த 30ம் தேதி பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டபோது லட்சுமியை வேன் டிரைவர் அருண்குமார் என்பவன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அருண் குமார் பயன்படுத்தி வந்த செல்போன் சிக்னல் மூலம் அவன் முப்பதாம் தேதி எங்கெல்லாம் சென்றான் என்ற விவரங்களை சேகரித்த காவல்துறையினர் அவனை பிடித்து விசாரித்தனர்.

 

murder

 

இதில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அருண்குமார் தெரிவித்ததால் அவனை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். அதன்பிறகு உண்மையானது வெளிவந்தது. பாத்திரக் கடைக்கு வேனில் சரக்கு ஏற்றி வரும் அருண்குமாரும் லட்சுமியும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் திருமண ஆசை காட்டி லட்சுமியிடம் அருண் எல்லை மீறியதாக கூறப்படுகிறது. லட்சுமியின் காதலுக்கு அவரது வீட்டில் பச்சைக்கொடி காட்டப்பட்ட நிலையில் அருண்குமார் திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளான். இதற்கிடையில் லட்சுமி கர்ப்பம் ஆனதால் இதனை தொல்லையாக நினைத்து லட்சுமியுடன் பேசுவதை நிறுத்திக் கொண்ட அருண் கடந்த 30ம் தேதி பாத்திரக்கடையில் பணி முடிந்து வீடு திரும்பிய லட்சுமியிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து சென்றான்.

 

murder

 

தனிமையில் லட்சிமியிடம் கர்ப்பத்தை கலைக்க சொல்லி வலியுறுத்தியுள்ளான் அருண். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த லட்சுமி காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது உருட்டுக்கட்டையால் தாக்கியதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக சடலத்தையும் அழிக்க திட்டமிட்டு அருண் தனது கூட்டாளி ஒருவனை வரவழைத்துள்ளான். 

 

Pregnant woman burned and killed... two people arrested including her boyfriend

 

இருசக்கர வாகனத்தில் இருவருக்குமிடையில் லட்சுமியின் சடலத்தை அமரவைத்து ஆரோவில் முந்திரி காட்டு துக்கிச்சென்று சடலத்தை வீசியுள்ளனர். கொலை செய்யப்பட்ட லட்சுமி முகம் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இரு சக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து லட்சுமியின் மீது ஊற்றி தீ வைத்துள்ளனர். லட்சுமியின் சடலம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக அருண்குமார் போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

 

இந்நிலையில் அவனையும் அவனது கூட்டாளியையும் கைது செய்த காவல்துறையினர் கொலைக்கு சாட்சியான முக்கிய தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.