ADVERTISEMENT

சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 சிறுவர்கள் கைது!

10:26 PM Oct 03, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் 17 வயதுடைய ஐயப்பன் என்பவரின் மகன். அதே தெருவைச் சேர்ந்த 15 வயதுடைய முத்துக்குமார் என்பவரின் மகன் ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனை செய்து வருவதாக சிதம்பரம் நகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை சிதம்பரம் காவல் உட்கோட்ட தனிப்படை போலீஸார் சிறுவர்கள் 2 பேரையும் பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.3,270, மதிப்புடைய 4 கிராம் வீதம் 150 கஞ்சா பாக்கெட்டுகள் (600 கிராம் கஞ்சா), கஞ்சா எடை போட செல்ஃபோன் போல உள்ள சிறிய கருவி, 2 செல்ஃபோன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

போலீசார் சிறுவர்கள் 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த 2 சிறுவர்களுக்கு திருவண்ணாமலையில் இருந்து கஞ்சா வாங்கி கொடுத்து விற்பனை செய்யுமாறு கூறிய முக்கிய நபர்கள் 2 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுவர்கள் இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT